இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலையோரம் கட்டுக்கட்டாக ரூ.45 லட்சம் பணம்: அதிர்ந்து போன போக்குவரத்துக் காவலர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் காவல்நிலையத்துக்கு உள்பட்ட சாலையோரப் பகுதியில், இருந்த ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.45 லட்சம் பணம் இருந்ததைப் பார்த்த போக்குவரத்துக் காவலர் அதிர்ச்சி அடைந்தார்.

News image
சாலையோரம் கட்டுக்கட்டாக ரூ.45 லட்சம் பணம்: அதிர்ந்து போன போக்குவரத்துக் காவலர்
Updated On :25 ஜூலை 2022, 10:59 am

DIN


ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் காவல்நிலையத்துக்கு உள்பட்ட சாலையோரப் பகுதியில், இருந்த ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.45 லட்சம் பணம் இருந்ததைப் பார்த்த போக்குவரத்துக் காவலர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அதனை காவல்நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தார். ஒரு அரசுப் பணியில் இருக்கும் போக்குவரத்துக் காவலர், ஆள் நடமாட்டமில்லாத சாலையில் கண்டெடுத்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அறிந்து, உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தச் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சத்தீஸ்கர் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் என பல முக்கிய நபர்களும், இவரைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து போக்குவரத்துக் காவலர் நிலம்பர் சின்ஹ கூறுகையில், சனிக்கிழமை காலை பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு தனியார் பள்ளிக்கு எதிரே கேட்பாரற்றுக் கிடந்த பையைப் பார்த்துள்ளார்.

அந்த பையைத்திறந்து பார்த்தபோது, அதில் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது.  உடனடியாக அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். பணத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், அது யாருடைய பணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நேர்மைக்கு உதாரணமாக விளங்கும் போக்குவரத்துக் காவலருக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.