சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்: மோடி ட்வீட்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்: மோடி ட்வீட்
Published on
Updated on
1 min read

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.

இதற்காக பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறாா். விமான நிலையத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பிரதமரை வரவேற்கின்றனா்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் 44 ஆவது  செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். 

இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸூடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே நடைபெறுவது ஒரு சிறப்பான பெருமைமிகுப் போட்டியாகும் என மோடி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com