கங்கோத்ரி கோயில் நடை திறப்பு 

உத்தரகண்டில் உள்ள புகழ்பெற்ற சார்தாம் கோயில்களில் ஒன்றான கங்கோத்ரி கோயில் நடையை முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று திறந்து வைத்தார். 
கங்கோத்ரி கோயில் நடை திறப்பு 
கங்கோத்ரி கோயில் நடை திறப்பு 
Updated on
1 min read

உத்தரகண்டில் உள்ள புகழ்பெற்ற சார்தாம் கோயில்களில் ஒன்றான கங்கோத்ரி கோயில் நடையை முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று திறந்து வைத்தார். 

மக்கள் பாதுகாப்பான, வசதியான யாத்திரையை உறுதி செய்வதற்காக சார் தாம் யாத்ரா செல்லும் வழியில் பக்தர்களுக்கு தனியார் சுகாதார நிறுவனம் வழங்கும் இலவச சுகாதார சேவைகளை திங்களன்று முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

குளிர்காலத்தை முன்னிட்டு கடந்த நவம்பர் 5, 2021ல் கங்கோத்ரி கோயில் நடை அடைக்கப்பட்டன. 

உத்தரகண்ட் அரசின் கூற்றுப்படி,

தினமும் கங்கோத்ரியில் 7 ஆயிரம் யாத்ரீகர்களும், பத்ரிநாத்தில் 15 ஆயிரம், கேதார்நாத்தில் 12 ஆயிரம், யமுனோத்ரியில் 4 ஆயிரம் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஏற்பாட்டை 45 நாட்களுக்கு அரசு செய்துள்ளது. 

கடந்தாண்டைப் போல் கரோனா எதிர்மறை சான்றிதழ் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com