ஆந்திரத்தில் லாரி-மினிவேன் மோதி விபத்து: 6 பேர் பலி

ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம் ரெண்டசிந்தலா கிராமத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர் மற்றும் 10  பேர் காயமடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பல்நாடு: ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம் ரெண்டசிந்தலா கிராமத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர் மற்றும் 10  பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து நடந்த போது மினிவேனில் 39 பயணிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில்  அந்த வழியே வந்த லாரி ஒன்று, நின்றிருந்த மினிவேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.  தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், காயமடைந்தவர்கள் குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நர்சராவ்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com