நாட்டில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
நாட்டில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 937 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,46,61,516 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 14,515 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 9 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,30,509 ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 324 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,41,16,492 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். நாட்டில் இதுவரை 219.73 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com