தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்த மகள்!

லாலு பிரசாத் யாதவின் மகள் தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வந்துள்ளதாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

News image

Lalu's daughter Roshni to donate kidney to her father

Updated On :10 நவம்பர் 2022, 4:28 pm IST

ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவரும், பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் அளிக்கவுள்ளதாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

74 வயதான யாத்வ், கடந்த மாதம் சிறுநீரக பிரச்னை காரணமாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருந்தார். பல உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் ஆர்ஜெடி தலைவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள அவரது மகள் ரோஷ்னி ஆச்சார்யா தனது தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானம் அளித்து, புதிய வாழ்வளிக்க முன்வந்துள்ளதாக, அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

தீவன வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிகிச்சைக்காக தில்லி மற்றும் ராஞ்சியில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.