விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல்: 6 பாகிஸ்தானியர்கள் கைது

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல் வழக்கில் 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

(கோப்புப்படம்)

Updated On :8 அக்டோபர் 2022, 1:01 pm

DIN

குஜராத்தில் ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல் வழக்கில் 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ரூ.350 மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை இந்தியக் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் பாகிஸ்தானில் பெரிய கடத்தல் வியாபாரி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக குஜராத் காவல் துறையினர் கண்டறிந்தனர்.

இந்தியக் கடலோர காவல் படையினர் மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து நடத்திய சோதனையில், சர்வதேச கடல் பகுதியின் அருகே 6 பணியாளர்களுடன் பயணித்த அல் சாகர் என்ற பாகிஸ்தான் கப்பலில் ரூ.350 கோடி மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் ஏ.டி.எஸ்., தகவலைப் பெற்று, நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ததுள்ளது.  6 பாகிஸ்தானியர்கள் பிடிபட்டுள்ளனர் என்று குஜராத் டிஜிபி கூறினார்.

முன்னதாக, கடந்த செப்.14ல் பாகிஸ்தான் படகு ஒன்றில் சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.