அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அக்னிபத் திட்டத்துக்கு ஆம் ஆத்மி முழு ஒத்துழைப்பு வழங்கும்: கேஜரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
Updated On :14 செப்டம்பர் 2022, 12:41 pm

DIN


புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

அக்னிவீரர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடும் விமரிசனங்களை முன் வைத்த ஆம் ஆத்மி கட்சி, வெறும் நான்கு ஆண்டுகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுக்க இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

எங்களுக்கு அக்னிபத் திட்டத்தின் மீது மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும், மத்திய அரசு செயல்படுத்தும் அக்னிபத் திட்டத்துக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.