பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரதமர் பிறந்தநாள்: 2 வாரங்களுக்கு மெகா ரத்த தான முகாம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி 2 வாரங்களுக்கு மெகா ரத்த தான முகாம் நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

Published On :

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி 2 வாரங்களுக்கு மெகா ரத்ததான முகாம் நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளை வரும் 17ஆம் தேதி கொண்டாடவுள்ளார். மோடியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மெகா ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தேசிய ரத்த தான நாளான அக்டோபர் 1ஆம் தேதி வரை முகாமை நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. 

ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம் எனவும் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ''மனிதநேயத்திற்காக ரத்த தானம் செய்யப்படுகிறது. இந்த மெகா ரத்த தான முகாம் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரத்த தானம் வழங்க விருப்பமுடையவர்கள் https://eraktkosh.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். பிரதமர் பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த மெகா ரத்த தான முகாமில் பங்கேற்று ரத்தத்தை தானமாக கொடுத்து வாழ்க்கையை காப்போம் என உறுதியேற்போம்'' எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.