பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி 2 வாரங்களுக்கு மெகா ரத்ததான முகாம் நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளை வரும் 17ஆம் தேதி கொண்டாடவுள்ளார். மோடியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மெகா ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தேசிய ரத்த தான நாளான அக்டோபர் 1ஆம் தேதி வரை முகாமை நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம் எனவும் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ''மனிதநேயத்திற்காக ரத்த தானம் செய்யப்படுகிறது. இந்த மெகா ரத்த தான முகாம் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரத்த தானம் வழங்க விருப்பமுடையவர்கள் https://eraktkosh.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். பிரதமர் பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த மெகா ரத்த தான முகாமில் பங்கேற்று ரத்தத்தை தானமாக கொடுத்து வாழ்க்கையை காப்போம் என உறுதியேற்போம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம்: கனிமொழி

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!

தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தோல்வி!

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


