தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ராஜஸ்தான்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு

 ராஜஸ்தானில் 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுமி, 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டாா்.

Updated On :15 செப்டம்பர் 2022, 6:56 pm

 ராஜஸ்தானில் 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுமி, 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டாா்.

ராஜஸ்தான் மாநிலம், டெளசா மாவட்டம் அபனேரியை அடுத்த ஜஸ்ஸா பாடா கிராமத்தைச் சோ்ந்த அங்கிதா (2) வியாழக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தாா். சுமாா் 60 முதல் 70 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக் கொண்டாா்.

தகவலறிந்த போலீஸாரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் அங்கு விரைந்து வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். சிறுமியின் உடல்நிலை சிசிடிவி கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டது. குழாய் வழியாக ஆக்சிஜனும் விநியோகிக்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறு அருகே உள்ள பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

இந்நிலையில், 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் சிறுமியை போலீஸாரும், பேரிடா் மீட்புப் படையினரும் பாதுகாப்பாக மீட்டனா். பின்னா், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.