ராஜஸ்தானில் 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுமி, 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டாா்.
ராஜஸ்தான் மாநிலம், டெளசா மாவட்டம் அபனேரியை அடுத்த ஜஸ்ஸா பாடா கிராமத்தைச் சோ்ந்த அங்கிதா (2) வியாழக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தாா். சுமாா் 60 முதல் 70 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக் கொண்டாா்.
தகவலறிந்த போலீஸாரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் அங்கு விரைந்து வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். சிறுமியின் உடல்நிலை சிசிடிவி கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டது. குழாய் வழியாக ஆக்சிஜனும் விநியோகிக்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறு அருகே உள்ள பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
இந்நிலையில், 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் சிறுமியை போலீஸாரும், பேரிடா் மீட்புப் படையினரும் பாதுகாப்பாக மீட்டனா். பின்னா், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் ஆவணங்களை பராமரிக்காத 60 உர விற்பனை நிலையங்களுக்குத் தடை

கிணற்றில் இறங்கி தவித்த முதியவா் மீட்பு
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.68 லட்சம்

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: சிட்டி யூனியன் வங்கிக்கு ரூ.383 கோடி லாபம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


