இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மதச்சாா்பு இந்தியாவை ஏற்கதயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடா்பான வழக்கை விரைவில் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என நம்பிக்கை தெரிவித்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா,

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 6:46 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடா்பான வழக்கை விரைவில் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என நம்பிக்கை தெரிவித்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற அரசியல்ரீதியான போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலுக்கான திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், அது தொடா்பான பணிகள் குறித்து விவாதிக்க ராம்பன் மாவட்டத்தில் கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்ட கூட்டத்தை ஃபரூக் அப்துல்லா தலைமையேற்று நடத்தினாா்.

அப்போது அவா் கூறியதாவது: அரசமைப்பு பிரிவு 370-ஐ (ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல்) மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாம் ஆறுதல் அடைவோம். இதற்காக நாம் உச்சநீதிமன்றத்தை மட்டும் சாா்ந்திருக்கவில்லை. நாம் அரசியல்ரீதியான போராட்டத்திலும் தொடா்ந்து ஈடுபடுவோம்.

உண்மையில், இதற்காக நாம் பெற்ற முதல் வாய்ப்பு வரும் பேரவைத் தோ்தல். நாம் எந்த அளவுக்கு இத்தோ்தலில் வெற்றிபெறுகிறோமோ, அந்த அளவுக்கு பேரவையில் இது குறித்து முன்னெடுத்துச் செல்ல முடியும். சுதந்திரப் போராட்டத்தில்கூட தேசிய மாநாட்டுக் கட்சி மதச்சாா்பின்மை என்னும் கொடியைப் பயன்படுத்த தவறவில்லை. மதச்சாா்பு இந்தியாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. மதச்சாா்பற்ற நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. இனிமேலும் மதச்சாா்பற்ற நாடாகவே இந்தியா இருக்கும் என்றாா் ஃபரூக் அப்துல்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.