கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டி?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங்கும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 7:28 am

DIN

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங்கும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மறுக்கும்பட்சத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று தெரிகிறது. அதுபோல, காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் களமிறங்குகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய் சிங் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தலில் அசோக் கெலாட் அல்லது சசி தரூரா? என்று கேள்வி எழுப்பியதற்கு, 

'பார்க்கலாம். நான் என்னை போட்டியிலிருந்து இன்னும் விலக்கவில்லை, போட்டியில் என்னை ஏன் ஒதுக்கி வைக்க விரும்புகிறீர்கள்? யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், அனைவருக்கும் உரிமை உண்டு. செப். 30 ஆம் தேதி மாலை உங்களுக்குத் தெரியும்' என்று கூறியுள்ளார். 

இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 3-வது நபராக திக்விஜய் சிங்கும் போட்டியிட வாய்ப்புள்ளது தெரிகிறது.

ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து, 'கவலை இல்லை. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதுபோல விருப்பமில்லாதவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்தக் கூடாது' என்றார். 

திக்விஜய் சிங் இவ்வாறு கூறியுள்ளது காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்த  பரபரப்பைக் கூட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.