மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

என்று மாறும் இந்த நிலை? மகனின் உடலை தோளில் சுமந்துச் சென்ற தந்தை

ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தனது மகனின் உடலை கொட்டும் மழையில் தந்தையே தோளில் சுமந்துச் சென்ற அவலம் நடந்தேறியுள்ளது.

News image

என்று மாறும் இந்த நிலை? மகனின் உடலை தோளில் சுமந்துச் சென்ற தந்தை

Updated On :4 ஆகஸ்ட் 2022, 12:41 pm

DIN


பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தனது மகனின் உடலை கொட்டும் மழையில் தந்தையே தோளில் சுமந்துச் சென்ற அவலம் நடந்தேறியுள்ளது.

ஸ்வரூப்ரானி நேரு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதால், தனது மகனின் உடலை பல கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்துச் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஹா கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஷிவன், மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதால், மருத்துவமனை வளாகத்தில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகக் கட்டணம் கேட்டதால், தந்தை, தனது மகனின் உடலை தோளில் சுமந்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.

செல்லும் வழியில், ஒரு கார் ஓட்டுநர், இந்த தந்தைக்கு உதவ முன் வந்துள்ளார். இதையடுத்து, சிறுவனின் உடலை காரில் எடுத்துச் சென்றுள்ளார். பிறகு திஹா கிராமத்துக்குள் இறங்கி மீண்டும் தனது மகனின் உடலை தோளில் போட்டுக் கொண்டு நடந்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வழக்கம் போல இந்த துயரச்  சம்பவங்கள் எவ்வாறு மாதத்துக்கு ஒரு முறை நடக்கிறதோ, அதுபோல இந்த விடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல வைரலாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.