ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தரவரிசைப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் முதலிடம்...

News image

தரவரிசைப் பட்டியலை வெளியிடும் அமைச்சர் அருண்ராஜ் - எக்ஸ்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 7:21 pm IST

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆக. 10) வெளியிட்டார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் இன்று (ஆக.10) நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு, 2026 - 2027 ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,723 பேரும் நிர்வாக இடங்களுக்கு 30,904 பேரும் விண்ணப்பித்திருந்தனர். நீட் நுழைவுத் தேர்வில் 61,306 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிகா, 2வது இடத்தையும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுடர், 3வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வாணிஷா சதிஷ் 4வது இடத்தையும், ஈரோட்டைச் சேர்ந்த சபரி, 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் ஐந்து பேரும், மாணவிகள் ஐந்து பேரும் இடம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 72,633 ஆகும். இதில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தன. மேலும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

2026 - 2027 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 41,726. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 35,926. இதில் மாணவர்கள் 12,551, மாணவிகள் 23,375 ஆவர்.

7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4,860. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 3,625. இதில் மாணவர்கள் 981, மாணவிகள் 2,644 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rank list for medical courses released by Minister Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.