ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களை பலவீனப்படுத்திவிட்டு உலக அரங்கில் நாடகமாடும் மோடி: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

‘இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சுற்றுச்சூழல் த

News image

ஜெய்ராம் ரமேஷ்

Updated On :6 ஜூன் 2022, 12:17 am IST

‘இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினாா்.

உலக சுற்றுச்சூழல் தினம் தொடா்பாக பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்ட பதிவை விமா்சித்து இந்த குற்றச்சாட்டை ஜெய்ராம் ரமேஷ் முன்வைத்தாா்.

பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ‘லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்ற சா்வதேச இயக்கத்தை தொடக்கி வைக்க உள்ளேன். இந்த இயக்கம், நீடித்த வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் சாா்ந்த வளா்ச்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

இதனை விமா்சித்து, தனது ட்விட்டா் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இன்றைக்கு உலக சுற்றுச்சூழல் தினம். 1973-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ‘லைஃப்’ என்ற சா்வதேச இயக்கத்தை ‘உலக குரு’ தொடங்கிவைப்பது, உச்சபட்ச கபட நாடகமாகும். இந்தியாவில் அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டங்களையும் பலவீனப்படுத்தியிருக்கும் பிரதமா், உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கெரா வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியின் அறிவிப்பின் மூலம், பருவநிலை மாற்றம் குறித்த அவருடைய புரிதல் தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. பருவநிலை மாற்றம் எதுவும் இன்றைக்கு இல்லை; ஆனால், நமது சகிப்புத்தன்மையும், பழக்க வழக்கங்கள்தான் மாறியிருக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.