குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம்.. முதல் முறையாக தாராவியில்

நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல், தாராவில் கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது.

News image

பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம்.. முதல் முறையாக தாராவியில்

Updated On :25 மார்ச் 2022, 12:47 pm


மும்பை: நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல், தாராவில் கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், அங்கு கரோனா பரவல் கடுமையாக இருந்த நிலையில், நேற்று புதிதாக கரோனா பாதிப்பும், பலியும் கூட இல்லாத நாளாக அமைந்தது.

மும்பை மாநகராட்சி வெளியிட்ட புள்ளி விவரத்தில், தாராவியில் மட்டும் இதுவரை 8,233 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 419 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவியில் கரோனா நோயாளிகள் இல்லாத நிலையில், தாதர் மற்றும் மாஹமில் தலா ஒரு கரோனா நோயாளி இருக்கிறார்கள்.

இன்று முற்றிலும் பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம் நாளாக அமைந்துவிட்டது. அப்பகுதி சுகாதார அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் எடுத்த கடுமையான நடவடிக்கையால்தான் இது நிகழ்ந்துள்ளது. இங்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதை செய்துமுடித்துள்ளோம். மறுபக்கம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்கிறார் நகராட்சி ஆணையர் கிரண்.

மிகக் குறுகிய பகுதியில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு 5,000 சிறு தொழில்கள், தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் நடக்கின்றன. அங்கு 2020 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 2020ஆம் ஆண்டில் தாராவிதான் கரோனா பரவலில் மிக முக்கிய அபாயப் பகுதியாக இருந்தது. தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.