மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாக 99% உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீதமிருக்கும் அனைத்து போட்டிகளில் தோல்வியுற்றால் மட்டுமே இந்த அணி தேர்வாகம் செல்லும்; ஒரு டிரா பெற்றால்கூட போதுமனதாக இருக்கிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் அதிக முறை கோப்பை வென்ற மான்செஸ்டர் யுனைடெட் சமீப காலமாக கோப்பை வெல்லாமலும் சாம்பியன்ஸ் லீக்கிற்கு தேர்வாகமலும் இருக்கிறது.
தற்போது, மான்செஸ்டர் யுனைடெட் வெற்றிகளைக் குவித்து வருகிறது. பிரீமியர் லீக்கில் 34 போட்டிகளில் 61 புள்ளிகளுடன் இருக்கிறது.
ப்ரென்ட்ஃபோர்ட் உடனான இன்றைய போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வென்றது. இந்தப் போட்டியில் காசிமரோ 11ஆவது நிமிஷத்திலும் பெஞ்சமின் செஸ்கோ 43ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்கள்.
தற்போது, புள்ளிப் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் அணி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இன்னும் 4 போட்டிகள் மீதமிருக்கின்றன.
பிரீமியர் லீக்கில் இருந்து டாப் 5 அணிகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்துப் போட்டியான சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகும் என்பது விதிமுறையாக இருக்கிறது.
இந்தப் பட்டியலில் 6,7ஆவது இடத்தில் இருக்கும் பிரைடன், போர்ன்மவுத் அணிகளின் தோல்விகள் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தேர்வை உறுதிப்படுத்தும். மாறாக, யுனைடெட் அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்று, பிரைடன் அனைத்திலும் வென்றால் மட்டுமே இந்தத் தேர்வில் மாற்றம் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.
பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்
1. ஆர்செனல் - 73 புள்ளிகள் (34 போட்டிகளில்)
2. மான்செஸ்டர் சிட்டி - 70 புள்ளிகள் (33 போட்டிகளில்)
3. மான்செஸ்டர் யுனைடெட் - 61 புள்ளிகள் (34 போட்டிகளில்)
4. லிவர்பூல் - 58 புள்ளிகள் (34 போட்டிகளில்)
5. ஆஸ்டன் வில்லா - 58 புள்ளிகள் (34 போட்டிகளில்)
6. பிரைடன் - 50 புள்ளிகள் (34 போட்டிகளில்)
7. போர்ன்மவுத் - 49 புள்ளிகள் (34 போட்டிகளில்)
Summary
Manchester United is 99% certain to qualify for the Champions League!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல் நினோ பருவநிலை மாற்றத்தால் தேயிலை சாகுபடி பாதிக்கும்: உபாசி ஆராய்ச்சி மையம் தகவல்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!
ஆசிய போட்டிகள் ஹாக்கி: இந்திய மகளிா் அணி அறிவிப்பு

ஸ்பெயினிடம் தோல்வி: கண்ணீருடன் வெளியேறியது 2 முறை உலகக் கோப்பை வென்ற உருகுவே!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



