ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருமணத்துக்கு புறம்பான உறவு: ஜீவனாம்சம் மறுப்பு!

திருமணத்துக்கு புறம்பான உறவால் விவகாரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமையில்லை என பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:01 am

DIN

திருமணத்துக்கு புறம்பான உறவால் விவகாரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமையில்லை என பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அம்பாலாவை சேர்ந்த சரத், தன் மனைவி சங்கீதா தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், வேறு ஒருவருடன் தகாத உறவில் உள்ளதாகவும் காரணம் காட்டி மனைவிடம் விவகாரத்துக் கேட்டு அம்பாலா நீதிமன்றத்தில் சரத் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த அம்பாலா நீதிமன்றம், சங்கீதாவிடம் இருந்து சரத்துக்கு விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்தது. 

விவகாரத்து ஆனதையடுத்து, சரத்தின் முன்னாள் மனைவி சங்கீதா பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தகாத உறவு காரணமாக விவகாரத்து வழங்கப்பட்ட நிலையில், சங்கீதா அதைத் தொடர்ந்து கொண்டு இருப்பதை சரத் நிரூபித்தார்.

தொடர்ந்து தகாத உறவை கடைப்பிடித்து வருவதால் ஜீவனாம்சம் பெற சங்கீதாவுக்கு உரிமை இல்லை என பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.