கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்தியா கூட்டணி உடைகிறதா? ஆம் ஆத்மி அதிருப்தி!

தில்லி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 3:18 pm

DIN

தில்லி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் 
செளரப் பரத்வாஜ், தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் (ஆம் ஆத்மி) தலைமை முடிவு செய்யும். ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகக் குழு, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளுடன் அமர்ந்து இது தொடர்பாக ஆலோசிப்போம்.

அவர்களுக்கு (காங்கிரஸ்) தில்லியில் கூட்டணி தேவைப்படவில்லை என்றால், இந்தியா கூட்டணியில் நாங்கள் இருப்பதற்கும் அர்த்தமில்லை. இது நேர விரையம்தான். இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுப்பது குறித்து எங்கள் கட்சி தலைமை முடிவு செய்யும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.