மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அவள் தில்லி சென்றதே தெரியாது! நாடாளுமன்றத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர்

நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுப்பார் என்றும் அதற்காக பல போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

News image
Updated On :13 டிசம்பர் 2023, 4:39 pm

DIN

அவர் தில்லி சென்றதே தெரியாது என நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே புகைக்குண்டுகளை வீசியதாக கைது செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார். 

அதிகம் படித்த அவர், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுப்பார் என்றும் அதற்காக பல போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருவர் அத்துமீறிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே புகைக் குண்டுகளை வீசிய  பெண்,  நீலம் ஆஸாத் என்று அடையாளம் காணப்பட்டார்.

அவர் ஹரியாணா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும் அவரின் வீட்டை நோக்கி பலர் திரும்பினர். இது தொடர்பாக நீலம் ஆஸாத்தின் இளைய சகோதரர் பேசியதாவது, 

என் சகோதரி தில்லி சென்றுள்ளார் என்பதே எங்களுக்குத் தெரியாது. அவள் தனது படிப்புக்காக ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியில் தங்கியிருக்கிறார் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும். இரு நாள்களுக்கு முன்பு அவர் எங்களைக் காண வந்தார். நேற்று மீண்டும் திரும்பிவிட்டார்.

அவர் பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்., எம்.பில்., படித்துள்ளார். நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்காக பலமுறை அவர் குரல் கொடுத்துள்ளார். அதோடு விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார். அவர் போராட்டக்குணம் கொண்டவர்தான். ஆனால், அவர் தில்லி சென்றுள்ளார் என்பது இப்போதுதான் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (டிச. 13) வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்தபோது, மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.

‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை அவையில் வீசினர். அவர்களை மடக்கிப் பிடித்த எம்.பி.க்கள் அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இருவர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் புகைக் குண்டுகளை வீச முயன்றபோது காவல் துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் இருவர் (நீலம், அமோல்) பெண்கள் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.