இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒற்றுமை நடைப்பயணத்தின் எதிரிகள் இந்திய மக்களின் எதிரிகள்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்

 காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை ஆதிசங்கராச்சாரியாவுடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

News image
Updated On :20 ஜனவரி 2023, 12:59 pm

DIN

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை ஆதிசங்கராச்சாரியாவுடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியாவில் பல மாநிலங்களின் வழியாக சென்று தற்போது இறுதியாக ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தின்போது பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பலரும் அவருடன் பங்கேற்றனர். ஒற்றுமை நடைப்பயணத்தின்போது ராகுல் காந்தி கடவுள் ராமருடன் ஒப்பிடப்பட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை ஆதிசங்கராச்சாரியாவுடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் லக்கான்பூர் பகுதியில் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட ஃபரூக் அப்துல்லா பேசியதாவது: ஆதி சங்கராச்சாரியாவுக்குப் பிறகு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டுள்ள முதல் நபர் ராகுல் காந்தி ஆவார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கராச்சாரியா இங்கு வந்தார். அவர் வந்தபோது ஜம்மு-காஷ்மீரில் சாலை வசதிகள் கிடையாது. அவர் காடுகளின் வழியே தனது யாத்திரையை மேற்கொண்டார். அவர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டார். ஆதி சங்கராச்சாரியாவைத் தொடர்ந்து 2-வது நபராக கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது இந்தியாவினை ஒன்றினைப்பதற்கான யாத்திரை. இந்தியாவில் வெறுப்புணர்வு விதைக்கப்பட்டுள்ளது. ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்த வைக்கப்படுகிறார்கள். காந்தி மற்றும் ராமருடைய இந்தியாவில் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். இந்த ஒற்றுமை நடைப்பயணம் இந்தியாவை ஒன்றினைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் ஆகும். இந்த நடைப்பயணத்தின் எதிரிகள் இந்தியா மற்றும் இந்திய மக்களின் எதிரிகள் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.