பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள்: ம.பி.முதல்வர்
மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.


மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.
மாநில தலைநகர் போபாலில் உள்ள மோதிலால் நேரு அரங்கத்தில் பெண் காவலர்கள் 250 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதின் முக்கிய காரணம் அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். பெண் காவலர்கள் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மேலும் பெண்களின் சுய மரியாதையையும் பாதுகாப்பார்கள்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக மாநில அரசால் பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை உருவாக்கிய முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...