தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவோம்: எடியூரப்பா

காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாவிட்டால் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2023, 10:54 am

DIN

காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாவிட்டால் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் செயல்படுத்த தவறினால் ஆட்சியிலிருந்து விலகவும் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கர்நாடக  முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு தேவையின்றி மத்திய அரசின் மீது பழிசுமத்தி வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது. ரேஷனில் அரிசி வழங்குவது தொடர்பாக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மத்திய அரசின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசு மக்களுக்காக ஏற்கனவே 5 கிலோ அரிசியினை இலவசமாக வழங்குகிறது. மாநில அரசுக்கு கூடுதலாக அரிசி தேவைப்பட்டால் அவர்கள் அரிசியினை வாங்கி அரிசி வழங்கல் தொடர்பான அவர்களது தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் அதற்கு பதிலாக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.

காங்கிரஸ் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அந்த ஐந்து வாக்குறுதிகளில் மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற வாக்குறுதியைத் தவிர மற்ற வாக்குறுதிகள் எதனையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை. சட்டமன்றக் கூட்டம் தொடங்குவற்கு மற்ற நான்கு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டால் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும். அதனால், அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கர்நாடகத்தின் சட்டமன்ற கூட்டத் தொடர் வருகிற ஜூலை 3 முதல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.