தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

ஒடிசாவில் மிகப்பெரிய இருமல் மருந்து மோசடி கும்பல் கைது

ஒடிசா மாநிலத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், மிகப்பெரிய இருமல் மருந்து மோசடி கும்பல் சிக்கியது. சந்தேகிக்கப்படும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

ஒடிசாவில் மிகப்பெரிய இருமல் மருந்து மோசடி கும்பல் கைது

Updated On :14 மார்ச் 2023, 0:13 pm IST


பொலாங்கிர்: ஒடிசா மாநிலத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், மிகப்பெரிய இருமல் மருந்து மோசடி கும்பல் சிக்கியது. சந்தேகிக்கப்படும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள எஸ்காஃப் என்ற இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவர் கண்டறியப்பட்டு, அவர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக பின்தொடர்ந்ததில, மிகப்பெரிய இருமல் மருந்து மோசடி கும்பல் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இவர்களை கைது செய்ய, உள்ளூர் மக்கள் அளித்த தகவல், தகவல் தொழில்நுட்பம் மூலம் கிடைத்த தகவல்கள், பல்வேறு துப்புகளைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.