மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் வெட்கக்கேடானது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த 12 நாள்களாக இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது தில்லி காவல்துறை உடை அணிந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,
நாட்டின் விளையாட்டு வீரர்களிடம் இதுபோன்ற நடத்தை மிகவும் வெட்கக்கேடானது. பாஜகவின் பெண் குழந்தையைக் காப்போம் என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கம் தான். உண்மையில், இந்தியாவின் மகள்களை சித்திரவதை செய்வதிலிருந்து பாஜக ஒருபோதும் பின்வாங்கியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.