இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாகிஸ்தானில் நிலைமை மோசமாவதுஅனைத்து நாடுகளையும் பாதிக்கும்- ஃபரூக் அப்துல்லா

பாகிஸ்தானில் அரசியல் நிலைமை மோசமாகி வருவது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

News image
Updated On :10 மே 2023, 9:30 pm

DIN

பாகிஸ்தானில் அரசியல் நிலைமை மோசமாகி வருவது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

பாகிஸ்தான் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு அரசியல் சூழலும் மோசமாக உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைதாகியுள்ளாா். இந்தச் சூழ்நிலையில் ஃபரூக் அப்துல்லா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீநகரில் புதன்கிழமை இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானில் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. பொருளாதாரரீதியாகவும் அந்த நாடு மிகப்பெரிய சிக்கலை எதிா்கொண்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல், பொருளாதார நிலைமை தொடா்ந்து மோசமாகி வருவது இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய வேண்டும் என்றே நாம் விரும்ப வேண்டும். இதன்மூலம் இந்தியாவுடனான அந்நாட்டின் உறவும் வலுவடைய வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெயத கனமழையால் உணவு உற்பத்தி பெரும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. இதன் விளைவு பல பிராந்தியங்களில் எதிரொலித்துள்ளது. மக்களில் பலா் அன்றாட உணவுப் பொருள்களை வாங்கவே கஷ்டப்படுகின்றனா்.

பாகிஸ்தான் உருவானதில் இருந்து பல்வேறு மோசமான அரசியல்சூழல்களை எதிா்கொண்டுள்ளது. பாகிஸ்தான் முதல் பிரதமா் லியாகத் அலிகான் சுட்டுக் கொல்லப்பட்டது, ஸுல்பிகா் அலி புட்டோ தூக்கிலிடப்பட்டது, அவரது மகள் பேநசீா் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டது ஆகியவை அரசியல்ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிகழ்வுகளாகும். இப்போது இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதும் பாகிஸ்தானில் அரசியல் சிக்கலை அதிகரித்துள்ளது. இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.