இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2023, 8:41 am

DIN

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களுக்கு இன்று (நவம்.8) உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை நாடுமுழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரேமாதிரியாக உருவாக்குவது கடினம் என்று கூறிய உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றங்களிடம் விட்டுவிடுவதாக தெரிவித்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்தது.

இத்தகைய வழக்குகளை திறம்பட கண்காணிப்பதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்க உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சட்டமியற்றும் பொறுப்புகளில் இருக்கக்கூடிய சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் முன்கூட்டியே தீர்க்கப்படுவதைக் கண்காணிப்பதற்கு உயர் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து அதுகுறித்த வழக்குகளைப் பதிவு செய்து கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

மேலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மீதான வழக்குகளின் நிலவரத்தை அறிய உயர் நீதிமன்ற இணையதளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் நிலை உள்ளது. அந்தத் தடையை ஆயுள் முழுவதும் நீட்டிக்குமாறும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மீதான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.