நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டுடன் கா்நாடக துணை முதல்வா் சிவகுமாா் சந்திப்பு

ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட்டை கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:44 pm IST

ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட்டை கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து டி.கே.சிவகுமாா் கூறுகையில், மக்களுக்கான பொதுநலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செயல்படுத்துவதில் ராஜஸ்தான் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா், முதல்வரின் சிரஞ்சீவி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தற்காலிகப் பணியாளா்கள் சட்டம், சுகாதார உரிமை, அன்னபூா்ணா உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் போன்றவை நாடு முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

அதேபோல் தற்போது கோட்டாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சம்பல் நதிக்கரைத் திட்டமும், ஆக்சிஜன் நகரப் பூங்காவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இச்சந்திப்பின்போது ராஜஸ்தான் மாநிலக் கல்வி அமைச்சா் பி.டி.கல்லா, பெட்ரோலிய மற்றும் கனிம வளத் துறை அமைச்சா் ஜெயின் பையா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரதாப் சிங் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.