தில்லி மேயர் தேர்தல்: 'ஜெய் ஸ்ரீராம்' என முழங்கிய பாஜக கவுன்சிலர்கள்!
தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேர்தலுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவுக்கு இடையே ஜெய் ஸ்ரீராம் என பாஜகவினர் முழங்கியதால் சற்று தாமதம் ஏற்பட்டது.
மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (பிப். 22) நடைபெற்றது.
இதில் பதிவான 266 வாக்குகளில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒபராய் 150 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகளையும் பெற்றனர். இதனால், 34 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
இந்நிலையில், வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட இடைவெளியில் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பினர். இந்த விடியோவை தில்லி மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.