கடும் பனி காரணமாக விமான பயணிகளுக்கு தில்லி விமான நிலையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தில்லியில் கடும் பனியால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் காலையிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.
கடும் பனியால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமான பயணிகளுக்கு தில்லி விமான நிலையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
விமான இயக்கங்கள் தற்போது சீராக இருப்பதாகவும் எனினும் பயணிகள், தாங்கள் பயணிக்கவுள்ள விமானங்களின் சமீபத்திய தகவல், அடுத்த இயக்கம் உள்ளிட்ட விவரங்களை விமான நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டறிந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் பனி, புகை காரணமாக சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


