வயநாட்டிற்கு பதிலாக தென்மாநிலங்களில் வேறு ஏதேனும் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டிருக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ஆனி ராஜா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதேபோன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும் அதே தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், ஒரே கூட்டணியிலிருந்து இரு வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, பொதுமக்கள் மத்தியில் தற்போது பொதுவான கேள்வி ஒன்று நிலவுகிறது. வயநாடு தொகுதியில் ஆனி ராஜாவுக்கு எதிரான ராகுல் காந்தி ஏன் போட்டியிட வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்ன சொல்ல விரும்புகிறது? மிகக் குறுகிய காலத்தில் வயநாடு தொகுதி குறித்த முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. ராகுல் காந்தியை தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கலாம். மக்கள் இது குறித்து ஏன் கேள்வி எழுப்புகிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு
அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி

லக்னௌ விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

புதுச்சேரி பேரவைத் தோ்தல் தோல்வி எதிரொலி: வைத்திலிங்கம் ராஜிநாமா செய்யக் கோரி காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



