கலால் கொள்ளை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சிறையில் அடைக்க பாஜக மூத்த தலைமை சதித் திட்டம் தீட்டியதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சஞ்சய் சிங் செய்தியாளர்களுடன் உரையாற்றினார். தில்லி கலால் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகவ் மகுண்டாவை கேஜரிவாலுக்கு எதிராகப் பொய்யான அறிக்கையை வழங்குவதற்கு பாஜக அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டினார்.
கலால் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் மார்ச் 21-ல் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேஜரிவாலுக்கு எதிராக தவறான அறிக்கையை வழங்குமாறு அவர் அழுத்தம் கொடுக்கப்பட்டார். ஆனால் அவர் மறுத்ததால், அவரது மகன் ராகவ் ரெட்டி கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ச்சியான கேள்விகளுக்கு மத்தியில் ராகவ் ரெட்டி கேஜரிவாலுக்கு எதிராகப் பொய் உரைத்தார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சிறையில் அடைக்க பெரிய சதி நடந்துள்ளது.
மதுபான ஊழலுக்கு பாஜக தான் காரணம், அக்கட்சியின் மூத்த தலைமை இதில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
கேஜரிவால் நேர்மையான வாழ்க்கையை நடத்தியவர். நல்ல கல்வி மற்றும் தில்லி மக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.