

கேரளத்தில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற 41,976 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு 2-ம் கட்டத் தேர்தல் நாளான ஏப்ரல் 26 அன்று நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள்படி இந்த காவலர்கள் ஏடிஜிபி எம்.ஆர். அஜித் குமார் தலைமையில் செயல்படவுள்ளனர்.
கேரள காவலர்கள் தவிர கூடுதலாக 24,327 சிறப்பு காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.