கேரளத்தில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற 41,976 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு 2-ம் கட்டத் தேர்தல் நாளான ஏப்ரல் 26 அன்று நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள்படி இந்த காவலர்கள் ஏடிஜிபி எம்.ஆர். அஜித் குமார் தலைமையில் செயல்படவுள்ளனர்.
கேரள காவலர்கள் தவிர கூடுதலாக 24,327 சிறப்பு காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.