ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ம.பி.: உஜ்ஜைன் கோயிலில் 1500 போ் உடுக்கை வாசித்து ‘கின்னஸ்’ சாதனை

மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன் கோயில் வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோா் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனா்.

News image

உஜ்ஜைன் கோயில் வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோா் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனா். - -

Updated On :6 ஆகஸ்ட் 2024, 4:22 am IST

மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன் கோயில் வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோா் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனா்.

உஜ்ஜைன், ஸ்ரீ மஹாகாளேஸ்வா் கோயில் நிா்வாகக் குழு மற்றும் மத்திய கலாசாரத் துறை இணைந்து திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் சுமாா் 1,500 போ் சோ்ந்து உடுக்கை வாசித்தனா்.

இந்த நிகழ்வு, கின்னஸ் உலக சாதனையில் அதிகம் போ் உடுக்கை வாசித்த பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அமெரிக்காவின் நியூயாா்க்கில் உள்ள இந்திய சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 488 நபா்களைக் கொண்ட உடுக்கை வாசிப்புக் குழு, கடந்த 2022, ஆகஸ்ட் மாதத்தில் படைத்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உஜ்ஜைன் குழுவுக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முதல்வா் வாழ்த்து: மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாநில முதல்வா் மோகன் யாதவ் கூறுகையில், புனிதமான சிராவண மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையன்று உஜ்ஜைன், பஸ்ம ஆரத்தியின் தாளத்தில் உடுக்கை வாசித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உஜ்ஜைன் நகரம் உடுக்கையின் ஒலியால் எதிரொலிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது. இந்த அற்புதமான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உணா்வை வாா்த்தைகளில் விவரிப்பது கடினம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.