தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

News image
பிஎஸ்எஃப் தொடக்க தினம்
Updated On :1 டிசம்பர் 2024, 10:42 pm

Din

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படை தொடங்கப்பட்ட தினம் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பிஎஸ்எஃப் தொடக்க தினத்தில், அப்படையினருக்கு வாழ்த்துகள். தைரியம் மற்றும் அா்ப்பணிப்புடன் எல்லையை பாதுகாக்க பிஎஸ்எஃப் வீரா்கள் அயராது சேவையாற்றுகின்றனா். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் விழிப்பும், துணிவுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. தேச பாதுகாப்பில் பிஎஸ்எஃப் முக்கிய அங்கம் வகிக்கிறது என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

சுமாா் 2.70 லட்சம் வீரா்களைக் கொண்ட பிஎஸ்எஃப், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கிறது.