திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

வயநாட்டில் பிரியங்கா: ‘ராகுல் காந்தி மீதான மக்களின் அன்பு தேர்தலில் எதிரொலித்தது!’

வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டம் வயநாட்டில் பிரியங்கா

News image

PTI

Updated On :1 டிசம்பர் 2024, 11:00 am

வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரியில் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று(டிச. 1) பொதுமக்களை சந்தித்து பேசினார்.

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கடந்த வியாழக்கிழமை பதவியேற்றாா். நாடாளுமனர் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், இன்று(டிச. 1) வயநாடு சென்றார்.

சுல்தான் பத்தேரியில் அவர் பேசியதாவது, “எனக்கு நீங்கள் அளித்து வரும் அன்புக்கும், அதன்பால் என்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தமைக்கும் நன்றி. எனது சகோதரர் ராகுல் காந்திக்கும் நன்றி. அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், உங்கள் அனைவருடனும் அவர் உருவாக்கி வைத்துள்ள பிணைப்புக்காகவும் நன்றி தெரிவிக்கிறேன்.

நீங்கள் அளித்து வரும் இந்த பேராதரவு, அவர் மீதான உங்கள் அன்பின் வெளிப்பாடே...

நாம் அனைவரும் இன்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நமது ஜனநாயகத்தை வேரறுக்கத் துடிக்கும் ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.