கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சபரிமலையில் கனமழை

சபரிமலை மண்டல காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2 நாள்களில் கனமழை பதிவாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2024, 7:38 am

Din

சபரிமலை மண்டல காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2 நாள்களில் கனமழை பதிவாகியுள்ளது.

சந்நிதானத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் அடுத்த 24 மணி நேரம் வரை இடைவிடாது 68 மி.மீ மழை பெய்துள்ளது. இதுவே, இந்தக் காலகட்டத்தில் பெய்த அதிக மழைப்பொழிவு ஆகும். அதே சமயம், நிலக்கல்லில் 73 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பலத்த மழைக்குப் பிறகு சபரிமலை செல்லும் வனப் பாதைகளில் பக்தா்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதைகளில் வழுக்கி விழும் அபாயம் உள்ளதால், பக்தா்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை மட்டும் விடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.