மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: மம்தா பானர்ஜி

இந்தியா கூட்டணியில் விரிசல் விழுந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைக் குறித்து பேசியுள்ளார் மம்தா பானர்ஜி.

News image

மம்தா பானர்ஜி | PTI

Updated On :9 பிப்ரவரி 2024, 7:10 pm IST

கொல்கத்தா: ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் திணறுவதாகவும் புராதனமான கட்சி வருகிற மக்களவை தேர்தலில் 40 தொகுதிகள் கூட பெறாது எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

ஆறு மாநிலங்கள் வழியாக காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் பாரத் ஜோதா யாத்திரையின் பகுதியாக மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டது. என்பது பறவைகள் வலசை போவதுபோல புகைப்படம் எடுத்து கொள்வதற்கான வாய்ப்பு இது என மம்தா கடுமையாக சாடியுள்ளார்.

அவர், “காங்கிரஸை நாடு முழுவதும் 300 தொகுதிகளில் நிற்க முன்மொழிந்தேன். அவர்கள் மறுத்துவிட்டனர். இப்போது மாநிலத்தில் முஸ்லீம் வாக்குகளைப் பெற வந்திருக்கிறார்கள். 300 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அவர்கள் 40 தொகுதி கூட வெற்றிபெறுவார்களா எனத் தெரியவில்லை. நாங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர்கள் தான் மறுத்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகள் கொடுத்தோம். இப்போது 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறார்கள். அதுமுதல் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய நிலுவையை தரக் கோரி நடத்திய போராட்டத்தில் இவ்வாறு மம்தா பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.