ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சக்ரதாரி சரண் சிங் பதவியேற்பு!

ஒடிசா உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சக்ரதாரி சரண் சிங் புதன்கிழமை பதவியேற்றார். 
ஒடிசா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியானார் சக்ரதாரி சரண் சிங்
ஒடிசா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியானார் சக்ரதாரி சரண் சிங்


ஒடிசா உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சக்ரதாரி சரண் சிங் புதன்கிழமை பதவியேற்றார். 

ஒடிசா உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு  ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

ஜனவரி 20, 1963ல் பிறந்த நீதிபதி சிங், தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் முடித்து 1990ல் வழக்குரைஞராகப் பதிவு செய்யப்பட்டார். 

1998ல் மத்திய அரசில் கூடுதல் நிலை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அவர், 2001 வரை தொடர்ந்தார். சிங் பிகாரில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார். மேலும், 2012ல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வரை தொடர்ந்தார். 

கடந்த 2023ல் பாட்னா உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். கடந்த வாரம் குடியரசுத் தலைவர் முர்மு, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த நிலையில், ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சக்ரதாசி சரண் சிங் நியமிக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com