சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் நேர்ந்த சோகம்

கார் அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

DIN

ஜெய்ப்பூர்: பாதசாரிகள் இருவர் மீது மோதிய கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதி விபத்துக்குள்ளானது.

காரில் ஓட்டுநர் உள்பட நால்வர் பயணித்துள்ளனர். அதில் ஒருவர் விபத்து ஏற்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நண்பர்களுடன் காரில் அமர்ந்து மது அருந்துவதை விடியோவாக எடுத்துசமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரிலிருந்து பார்மர் நோக்கி செல்லும்போது விபத்து நடந்திருக்கிறது.

காவலர்கள் சோதனை சாவடியில் நிறுத்த முயன்றபோது ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அதிவேகமாக சென்ற கார் பாதசாரிகள் இருவர் மீது மோதி சாலையோரம் நிறுத்தியிருந்த வேனில் மோதியது.

சாலையோரத்தில் நின்றிருந்த பெண்ணும் அவரது மகன் மனீஷ் ஆகிய இருவரும் கார் மோதியதால் உயிரிழந்துள்ளனர். காரில் இருந்த நான்கு பேரில் இருவர் பலியாகியுள்ளனர்.

மதுவால் நேர்ந்த விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரைக் கைது செய்துள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.