புது தில்லி: வரும் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காவலர்களிடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 9 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அமித் ஷா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது ஜம்மு-காஷ்மீரின் விரிவான வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான முக்கியமான ஆய்வுக் கூட்டங்கள், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான பணி நியமனக் கடிதங்களையும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை தொடங்கி வைக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.