வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கடனைத் திருப்பிக் கேட்ட ஆசிரியரை அடித்து உதைத்த குடும்பம்!

மகாரஷ்டிரத்தில் கடனைத் திருப்பிக் கேட்ட ஆசிரியரை குடும்பத்தோடு சென்று அடித்துத் துன்புறுத்தியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜனவரி 2024, 6:14 am

DIN

மஹாராஷ்டிரம் தானேவில் கல்லூரி ஆசிரியராக பணியாற்றும் நபர், கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதற்காக தாக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது, பாதிக்கப்பட்ட ஆசிரியர், கொடுத்த ரூ. 2000 கடனைத் திருப்பிக் கேட்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபரின் பழக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு கடனைத் திருப்பிக் கேட்டுள்ளார். 

இதையும் படிக்க: ஒடிசா: ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

பின்னர் அந்த பழக்கடைக்காரர், அவரது பெற்றோர், மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். கடனைத் திருப்பிக் கேட்பதற்காக அவரை 4 பேரும் தாக்கியுள்ளனர்.

அங்கிருந்த பொதுமக்கள் ஆசிரியரைக் காப்பாற்றிய நிலையில், அவரைத் தாக்கியவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் காவல்துறையினர் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.