இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

2.15 மணி நேர உரை! எனது அரசும் குரலும் வலிமையாக உள்ளது: மோடி

2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது பிரதமர் மோடியின் உரை. அவர் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

News image
மக்களவையில் மோடி- -
Updated On :2 ஜூலை 2024, 1:06 pm

DIN

மக்களவையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பிரதமர் மோடி உரையாற்றினார். உரைக்கு இடையே, தேசத்தின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

உரையின் நிறைவாக, எனது அரசும், எனது குரலும் வலிமையாக உள்ளது என்று கூறியிருந்தார் மோடி.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று மாலை 4.15 மணிக்கு உரையாற்றத் தொடங்கினார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து உரையாற்றினார்.

பிரதமர் மோடி உரையில், தேசத்தின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 140 கோடி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற ஒன்றாக இணைந்து உழைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்காந்த்ராவ் பகுதியில் ஆன்மிக நிகழ்வின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 100க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இரங்கல் தெரிவித்தார். நிவாரணப் பணிகளில், மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய மோடி, எனது அரசும், குரலும் வலிமையாக உள்ளதாகக் கூறியதோடு, சிறுபிள்ளைத்தனம் உள்ளோருக்கு இறைவன் நல்ல அறிவு தர வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

மாலை 4.15 மணிக்கு உரையாற்றத் தொடங்கிய மோடி, 6.30 மணிக்கு கிட்டத்தட்ட 2.15 நிமிடங்களுக்கும் மேல் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரையாற்றியுள்ளார். அவரது உரைக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.