தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி! தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி! வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

ராகுல் காந்தி மீது மற்றுமொரு வழக்கு!

பிகாரில் ராகுல் காந்தி மீது புதிய வழக்கு!

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2024, 9:14 pm IST

முசாபர்பூருக்கு அடுத்து பிகாரின் சியோஹர் மாவட்டத்தில் இந்துகளுக்கு எதிராக மக்களவையில் பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார்தராரான நிதிஸ்குமார் கிரி, குறிப்பிட சமூகத்தின் நம்பிக்கைகளை அவதூறு செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்து கொண்டதாகவும் ஹிந்துகளுக்கு எதிராக அவர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரத நியாய சஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவு 299 மற்றும் 302-ன் கீழ் சியோஹர் நீதிமன்றத்தில் ராகுல் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

நிதிஸ்குமார் கிரி சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் பிரபாசங்கர் சிங், புகார்தரார் அந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ஹிந்துகள் மற்றும் சனாதன தர்மம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் அவதூறு செய்யும் வகையில் பேசியதை தொலைக்காட்சியில் புகார்தாரர் பார்த்ததாகவும் ராகுல் காந்தி ஹிந்து கடவுளின் புகைப்படத்தை அநாகரீகமாக காண்பித்ததாகவும் இதனால் புகார்தாரர் கடுமையான மன வருத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதே நிகழ்வுக்காக முசாபர்பூரில் புதன்கிழமை ராகுல் காந்தி மீது வழக்குப் பதியப்பட்டது. திவ்யன்சு கிஷோர் என்பவர் பதிவு செய்த அந்த வழக்கின் விசாரணை ஜூலை 15-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.