27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராகுல் காந்தி மீது மற்றுமொரு வழக்கு!

பிகாரில் ராகுல் காந்தி மீது புதிய வழக்கு!

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2024, 9:14 pm IST

முசாபர்பூருக்கு அடுத்து பிகாரின் சியோஹர் மாவட்டத்தில் இந்துகளுக்கு எதிராக மக்களவையில் பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார்தராரான நிதிஸ்குமார் கிரி, குறிப்பிட சமூகத்தின் நம்பிக்கைகளை அவதூறு செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்து கொண்டதாகவும் ஹிந்துகளுக்கு எதிராக அவர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரத நியாய சஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவு 299 மற்றும் 302-ன் கீழ் சியோஹர் நீதிமன்றத்தில் ராகுல் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

நிதிஸ்குமார் கிரி சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் பிரபாசங்கர் சிங், புகார்தரார் அந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ஹிந்துகள் மற்றும் சனாதன தர்மம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் அவதூறு செய்யும் வகையில் பேசியதை தொலைக்காட்சியில் புகார்தாரர் பார்த்ததாகவும் ராகுல் காந்தி ஹிந்து கடவுளின் புகைப்படத்தை அநாகரீகமாக காண்பித்ததாகவும் இதனால் புகார்தாரர் கடுமையான மன வருத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதே நிகழ்வுக்காக முசாபர்பூரில் புதன்கிழமை ராகுல் காந்தி மீது வழக்குப் பதியப்பட்டது. திவ்யன்சு கிஷோர் என்பவர் பதிவு செய்த அந்த வழக்கின் விசாரணை ஜூலை 15-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.