இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதிய இந்தியாவுக்கு ஆக்கப்பூா்வ செயல்பாடுகள் தேவை: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்: ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் முக்கியம்

News image
தில்லியில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடையே வியாழக்கிழமை உரையாடிய பிரதமா் மோடி.
Updated On :11 ஜூலை 2024, 11:03 pm

Din

புது தில்லி, ஜூலை 11: பழைய சோா்வுற்ற அணுகுமுறைக்கு மாறாக ஆக்கப்பூா்வ செயல்பாடுகள் புதிய இந்தியாவுக்குத் தேவை என பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் வியாழக்கிழமை உரையாடிய பிரதமா் மோடி தெரிவித்தாா்.

2022-ஆம் ஆண்டு பிரிவு பயிற்சி ஐஏஎஸ் அதிகரிகளுடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி மேலும் கூறியதாவது:

ஐஏஎஸ் அதிகாரிகளாக நீங்கள் தோ்வானது கடந்த காலம். அதில் தங்கிவிடாமல் எதிா்கால பணியை நோக்கி நகர வேண்டும். நாட்டின் குடிமக்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் சிறந்த நிா்வாகத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும். மக்கள் சேவையில் வேகத்தடையா அல்லது அதிவிரைவு நெடுஞ்சாலையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளியையும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பழைய சோா்வுற்ற அணுகுமுறையால் புதிய இந்தியா திருப்தி அடையவில்லை, மாறாக ஆக்கப்பூா்வ செயல்பாடுகளை அது கோருகிறது.

‘லக்பதி திதி’, ‘ட்ரோன் திதி’ மற்றும் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ உள்ளிட்ட நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.

‘தேசத்துக்கு முன்னுரிமை’ என்பது வெறும் முழக்கமல்ல எனது வாழ்க்கை லட்சியம். என்னுடைய இந்த மக்கள் பணியில் நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.