இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தி ‘பிம்ஸ்டெக்’: பிரதமா் மோடி

சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தி ‘பிம்ஸ்டெக்’: பிரதமா் மோடி

News image
பிரதமா் மோடியை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்த ‘பிம்ஸ்டெக்’ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள்.
Updated On :12 ஜூலை 2024, 8:49 pm

Din

சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தியாக ‘பிம்ஸ்டெக்’ ஏழு நாடுகள் கூட்டமைப்பு திகழ்வதாகக் குறிப்பிட்ட பிரதமா் நரேந்திர மோடி, அந்த அமைப்புக்கான இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினாா்.

பன்முக கூட்டுறவுக்காக வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை ‘பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) அமைப்பு’ ஒன்றிணைக்கிறது.

இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள், பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனா்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தச் சந்திப்பின்போது உறுப்பு நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பு, போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, வா்த்தகம், சுகாதாரம், வேளாண், அறிவியல், பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பின் ஆண்டு உச்சி மாநாட்டை வரும் செப்டம்பரில் நடத்தவிருக்கும் தாய்லாந்துக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும்’என்று குறிப்பிட்டாா்.

பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமா், ‘சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தியாக ‘பிம்ஸ்டெக்’ ஏழு நாடுகள் கூட்டமைப்பு திகழ்கிறது’ என்று குறிப்பிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பில் (சாா்க்) பல்வேறு பிராந்திய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பை பிராந்திய ஒத்துழைப்புக்கான துடிப்புமிக்க அமைப்பாக உருவாக்குவதற்கு வலுவான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

மேலும், ‘சாகா்’ அல்லது ‘பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி’ என்ற விரிவான கொள்கை திட்டத்தின் கீழ் இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை இந்தியா வலுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.