நீட் விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்பாரா? பாஜக
நீட் தேர்வு முறையை மோசடி என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.


நீட் தேர்வு முறையை மோசடி எனக் குறிப்பிட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், ‘வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவலாக நடைபெற்றுள்ளதற்கும், ஒட்டுமொத்தமாக தோல்வி என்பதற்கும் ஆதாரமில்லை’ எனத் தெரிவித்து மறுதேர்வு கோரிய மனுக்களை செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மக்களவையில் நீட் தேர்வு முறையை மோசடி என்று தெரிவித்த ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று மன்னிப்பு கோருவாரா என்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய ரவிசங்கர், ”நீட் தேர்வில் மோசடி செய்துள்ளதாகு ராகுல் காந்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நம் நாட்டின் தேர்வு முறையை அவர் களங்கப்படுத்த விரும்புகிறாரா? காங்கிரஸ் ஆட்சியில் பலமுறை வினாத்தாள் கசிந்தன. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? ராகுல் காந்தி தனது சொந்த நாட்டை ஏன் அவமதிக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை மக்களவையில் ராகுல் காந்தி பேசியவதாவது:
“பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி.
நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருவரிடம் பணமிருந்தால், தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்கி விடலாம் என்றுதான், மக்களின் எண்ணத்தையே எதிர்க்கட்சிகளும் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...