/

ஜம்மு-காஷ்மீர்: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர்.

News image

சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஆம்புலன்ஸ்.

Updated On :27 ஜூலை 2024, 4:44 pm IST

ஜம்மு-காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கார் ஒன்று கிஷ்த்வாரில் இருந்து சிந்தன் டாப் வழியாக மர்வாவை நோக்கி சென்றுசொண்டிருந்தது. அப்போது அந்த கார் சாலையிலிருந்து இறங்கி திடீரென டக்சும் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களின் ஒரு போலீஸ்காரர், இரண்டு பெண்கள் மற்றும் ஆறு முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் உள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.