/

ம.பி. அரசு மருத்துவமனையில் எலிகளின் அட்டகாசம்: கேள்வி எழுப்பும் விடியோ

விடியோ ஒன்றில் ம.பி. அரசு மருத்துவமனையில் எலிகளின் நடமாட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
Updated On :12 ஜூன் 2024, 11:32 am

DIN

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் ஏராளமான எலிகள் துள்ளிக் குதித்து ஓடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் இந்த விடியோ அதன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டு, கமலா ராஜா மருத்துவமனையில் நோயாளிகளை விடவும் எலிகள் அதிகம் உள்ளது, இந்த மாநிலத்தின் சுகாதாரத் துறையின் நிலைமை இப்படித்தான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறது.

இந்த விடியோ வைரலான நிலையில், மருத்துவமனை டீன் கூறுகையில், மருத்துவமனையில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துமாறு கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன் என்றார்.

ஏற்கனவே மருத்துவமனையில் எலித் தொல்லைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், அங்கு நோயாளிகள் இருக்கும்போது இதுபோன்று நடக்காது என்றும் உறுதியளித்திருக்கிறார்.

ஆனால், இந்த விடியோவில், உள்நோயாளிகள் பிரிவில், நோயாளிகள் உடமைகள் இருக்கும்போதுதான் எலிகள் இந்த அட்டகாசத்தைச் செய்திருக்கும் என்பதை அங்கிருக்கும் பொருள்களே உணர்த்துகின்றன. எந்த எலியும் மனிதர்களைப் பார்த்து பயப்படுவதில்லை. ஆனால், எலிகளால் வரும் நோய்களால் அதனைப் பார்த்துதான் மனிதர்கள் பயப்படும் காலமாக இருக்கிறது. நோயைப் போக்க மருத்துவமனைக்கு வந்தால், அங்கு பத்து நோய் பரவும் அபாயம் ஏற்படும்போல இந்த எலிகளால் என்கிறார்கள் இந்த விடியோவைப் பார்த்த மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.