ரூ.2 கோடி வைரங்களை துபைக்கு கடத்த முயன்றவர் கைது!

ரூ.2 கோடி வைரங்களுடன் துபை செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ரூ.2 கோடி வைரங்களை துபைக்கு கடத்த முயன்றவர் கைது!
Published on
Updated on
1 min read

சூரத் விமான நிலையத்தில் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வைரங்களை மறைத்து வைத்திருந்ததாக துபை செல்லும் இந்தியப் பயணி ஒருவர், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சஞ்சய்பாய் மொராடியா என்ற அந்தப் பயணி இண்டிகோ ஏர்லைன்ஸ் சர்வதேச விமானத்தில் துபை செல்வதற்கு முன், சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அந்தப் பயணி முதலில் சாதாரண சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து முழு உடலையும் சோதனை செய்ததில், அவரது சூ சாக்ஸ் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்த 1,092 கிராம் மெருகூட்டப்படாத வைரங்களை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும், விசாரணைக்காக பயணி சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வைரங்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2.19 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com